Tuesday, December 28, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ராமலக்ஷ்மி

இன்று (டிசம்பர் 28 ) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் சிறப்பான முத்துக்களை தேர்ந்தெடுத்து சரமாக தொடுத்து வரும் ராமலக்ஷ்மி அக்காவுக்கு எங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைத்து வளங்களையும் பெற்று, நல்ல உடல்நலத்தோடும், மன மகிழ்வோடும் வாழ பிரார்த்தனை புரிகின்றோம்.


Tuesday, December 7, 2010

Wishes : ஜீவ்ஸ் பிறந்த நாள் !

16 ஆவது பிறந்த நாளை 16 ஆண்டுக்கும் மேலாக கொண்டாடும் நிழல்படக் கவிஞர் நம்ம ஜீவ்ஸுக்கு இன்று பிறந்த நாள் :)



ஜீவ்ஸ் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

- சுவரொட்டிக் குழு

Friday, November 19, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - முத்துக்கா

சிறு முயற்சி, சிறு முயற்சி எனக் கூறி கொண்டே பல பெரிய முயற்சிகளை செய்து அதில் வெற்றி கொண்டும், நம் மனதில் பல விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் விதத்தில் பதிவுகளை இட்டும் வரும் நம் சிறு முயற்சி முத்துலெட்சுமி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.


இன்று பிறந்தநாள் (19/11/2010) காணும் முத்துக்காவிற்கு எங்கள் மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...


அவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் என்றும் வெற்றி பெறவும் அவர் தன் வாழ்வில என்றும் வளமோடும், மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறோம்.


இவண்

அன்புத்தம்பிகள்

Friday, November 12, 2010

Wishes தேவ்


இன்று பிறந்த நாள் காணும் எங்கள் போர்வாள் கச்சேரி தேவ்க்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

Monday, November 8, 2010

Wishes: வீஎஸ்கே தாத்தா ஆனார் - வாழ்த்துகள்!

வட அமெர்க்காவின் வடகரோலினா மாகானத்தைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் ஆத்திகம் என்ற வலைப்பதிவின் பதிவர் திரு வீஎஸ்கே என்கிற சங்கர் குமார் அவர்களுக்கு தீபாவளி திருநாள் அன்று பேத்தி ஆர்யா பிறந்திருக்கிறாள்.

தாயும் சேயும் நலம்.

குழந்தையின் வருகை வீஎஸ்கே அவர்களில் இல்லத்தில் எல்லா நலமும் வளமும் பெற்று தந்து மகிழ்ச்சி வெள்ளத்தை ஏற்படுத்த நல்வாழ்த்துகள்.

அன்புடன்
கோவியார்.

Friday, October 29, 2010

Wishes : பணி ஓய்வு வாழ்த்துகள் !

அன்புக்குரிய பெரியவர் மற்றும் வலைப்பதிவர் திரு சீனா என்கிற சிதம்பரம் ஐயா தான் பார்த்துவந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் பதவியில் இருந்து சனிக்கிழமை (30 அக் 2010) பணியை நிறைவு செய்கிறார்.

36 ஆண்டுகள் 8 மாதங்கள் 20 நாட்கள் பார்த்துவந்த பணியை நிறைவு செய்து ஓய்வு பெரும் இந்நாளில் வாழ்த்துவதில் மகிழ்கிறேன். இல்லற கடமைகள் அனைத்தையும் செய்து, மகள்களுக்கு திருமணம் செய்து பேரக் குழந்தைகளை பார்த்தவர் என்பதால் அவரது பணி ஓய்வு அவருக்கு நிறைவே.

வயது அடிப்படையில் ஓய்வு என்பது பார்த்துவந்த பணிக்கு மட்டுமே. 60 வயதை அடைந்திருக்கும் சீனா ஐயாவை வாழ்த்துவதே ஆசி பெருவது போன்றதே.

எல்லா நலமும் வளமும் நிலைக்கப் பெற்று, உற்ற துணையுடன் சேர்ந்து வாழ்க இன்னும் நூறு ஆண்டுகள் !

அன்புடன்
கோவி.கண்ணன்

Thursday, October 21, 2010

குட்டிக் குசும்பனுக்கு ஹாப்பி பர்த் டே!!




தனது முதல் பிறந்தநாளை (20.10.2010) இன்று மாலை வெகு சிறப்பாகக் கொண்டாடவிருக்கும் குட்டிக் குசும்பன் திரு.இனியன் (மாப்பிள்ளையாச்சே!) அவர்களுக்கு இனிய அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Sunday, October 17, 2010

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - அவந்திகா

இன்று (18/10/2010) பிறந்த நாள் காணும் எங்கள் சகோதரி கிரிக்கெட்டின் தீவிர ரசிகை, பதிவர் அவந்திகாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வது.....

பழைய கும்மி குரூப்ஸ் :))

Saturday, October 16, 2010

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - யாவரும் நலம் சுசி!


வெற்றியை உணர்த்தும் விஜயதசமி நன்னாளில், இனிய பிறந்த நாளினை கொண்டாடும் “யாவரும் நலம் சுசி” அவர்கள் தம் வாழ்வில், மேலும் பல வெற்றிகளை பெற்றிடவும், பிறந்த நாள் நல்வாழ்த்துக்களோடு,வாழ்த்துகிறோம்!

வாழ்த்துக்களுடன் ...
சங்கம்

சீனா ஐயாவுக்கு பொறந்த நாளுங்கோ!


சக பதிவரும் வலைச்சரம் தளத்தின் நிர்வாகியுமான
நம்ம சீனா ஐயா அவர்கள் தனது 18 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்!
எல்லோரும் வாங்க! அவரை வாழ்த்தலாம்!

(படத்துல உனக்குன்னு ஒருமைல வந்துடுச்சு! ஒரு அந்நியோன்ய உரிமையா சொல்றேன்னு நினைச்சிக்குங்க..அவ்வ்வ்வ்)

Sunday, September 26, 2010

Wishes: 11 ஆம் ஆண்டு திருமணநாள் வாழ்த்துகள் - ஆ.ஞானசேகரன் !


சிங்கப்பூர் பதிவர் மற்றும் திருச்சியை பிறப்பிடமாகக் கொண்டவருமான நிழல்படக் கலைஞர் அம்மா அப்பா பெயரில் பதிவு வைத்திருப்பவரும், எனது நெடுநாள் நண்பருமான திரு ஆ.ஞானசேகரன் இணையர்களுக்கு இன்று 11 ஆம் ஆண்டு திருமண நாள்.

திரு ஞானசேகரன் இணையர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Friday, September 10, 2010

Wishes : அழகிய சிங்கைப் பதிவர் கிஷோர் திருமண நாள் வாழ்த்துகள் !

காதலியை கரம் பிடிக்கும் சிங்கைப் பதிவர் கிஷோர் திருமணம் இன்று இனிதே நிறைவுற்றது, நாளை திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடலூரில் நடை பெறுகிறது.

கிஷோர் இணையர்கள் இணையும் இந்த நல்வாழ்க்கையில் நடப்பவை யாவும் நன்மையாகவும் இனிமையாகவும் துவங்கி வளர்ந்து செழித்து நிலைக்க

நல்வாழ்த்துகளை சிங்கைப் பதிவர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.


நம் பதிவர் சகோதரி G3 - செந்தில்குமார் திருமண வாழ்த்து!!!


திருமண வாழ்த்து

மணமகள்: G 3 என்கிற காயத்ரி
மணமகன்: செந்தில் குமார்
இடம்: பெசண்ட் நகர் சமுதாயக்கூடம்
நாள்: செப்டம்பர் 10 - 2010


இன்னார்க்கு இன்னார் என்று
இறைவன் நிர்ணயிக்க
இவருக்கு இவளே துணை என்று
இருவீட்டார் நிச்சயிக்க - இங்கே
இனிதாய் துவங்குகிறது ஒரு
இல்லறப்பயணம்

மத்தளங்கள் கொட்ட
மலர்க்கூட்டம் பொழிய
அட்சதையேற்று இவர்கள்
அமர்ந்திருக்கும் நேரம்
வாழ்க! வளர்க!! வளம் பல பெருக!!! என்று
எண் திசை அனைத்திலும் வாழ்த்துரை நிறைந்திருக்க
அன்றில் பறவையாய் மணமொன்றி வாழவும்
இசையும் இனிமையுமாய் இணைபிரியாதிருக்கவும்
அன்புருவால் நின்று ஆசீர்வதிக்கின்றோம்
தமிழ் வலைப்பதிவர்களாகிய நாங்கள்!

புதுகை தென்றலுக்கு இன்று பிறந்த நாள்!!! வாழ்த்தலாம் வாங்க!!!


வலையுலகின் சின்ன துளசி டீச்சர், எல்லோருக்கும் அன்பானவங்க, நம்ம அயித்தான் ஸ்ரீராமின் ஜாடிக்கேத்த மூடி, ஆஷிஷ், அம்ருதாவுக்கு அன்பான தாய் மற்றும் ஆசான், புதுகை தந்த புதுவீடு கட்டிய தென்றல், 2007ல் வலைப்பூ ஆரம்பித்து இது வரை தன் வலைப்பூவில் மட்டுமே 600 பதிவுக்கு மேல் பூக்க வைத்த பிரம்மாண்ட நாயகி நம்ம "புதுகைத்தென்றல்" என்கிற ஒய்ஃபாலஜி புரபசர் திருமதி.கலாஸ்ரீராம் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.

இந்த பிறந்த நாளில் அவர்கள் எல்லா வளமும் பெற்று, எல்லா செல்வங்களும் பெற்று, எல்லா நிம்மதியையும் பெற்று நீடூடி வாழ எல்லாம் வல்ல ஆண்டவனிடம் வேண்டுகின்றோம்.

அருமையான பிறந்த நாள் கேக் வாங்கி இந்த சுவரொட்டி பதிவிலே அப்டேட் செய்யும் அன்பர்களுக்கு இன்று அய்தராபாத்தில் ஆவாக்காய் பிரியாணி போடப்படும்!

Thursday, September 2, 2010

Wishes : திருமண நாள் சீனா ஐயா - செல்வி ஷங்கர் அம்மா !



மதிப்பிற்குரிய சீனா ஐயா - செல்வி ஷங்கர் அம்மா இணையர்களின் 37 ஆம் திருமண நாள் இன்று.

இவர்களின் இல்லற நல்லறத்தில் பிறந்த இருமகள்களையும் நன்கு படிக்க வைத்து, நல்ல இடங்களில் மணம் முடித்துக் கொடுத்து அவர்களின் இலண்டன் நல்வாழ்க்கையில் விளைந்த பேரப்பிள்ளைகளை கொஞ்சி மகிழ சென்று வரும் பேறு பெற்றிருக்கிறார்கள்.

சீனா ஐயா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி புரிந்துவருகிறார், செல்வி ஷங்கர் அம்மா பள்ளி ஆசிரியராக பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். மதுரையில் வீற்றிருக்கும் சிதம்பரம் இவர். எல்லோரிடமும் இன்முகம் எதிர்கொண்டு பழகும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் இருவருமே. அவர்களின் இல்லத்திற்கு அழைக்கப்பட்டு விருந்து படைக்கப்பட்ட பல்வேறு பதிவர்களில் நானும் ஒருவன் என்கிற மகிழ்ச்சி எப்போதும் எனக்கு உண்டு.

வாழ்த்த வயதில்லை என்றாலும் பார்த்து மகிழ வயதுண்டு.



சீனா ஐயா - செல்வி ஷங்கர் அம்மா அவர்களின் நல்லுள்ளத்திற்கேற்ப என்றென்றும் நலமும் வளமும் நிறைந்து வாழ்வார்கள்.

Wednesday, September 1, 2010

சீனா சார்-செல்வி ஷங்கர் தம்பதிகளின் திருமண நாள் வாழ்த்துக்கள் !!!


1950 ல் ஒரு அக்டோபர் மாதம் 16ம் தேதி பிறந்த இவர் இன்னும் 74 நாட்களில் தனது சஷ்ட்டியப்த பூர்த்தியை தனது மனைவியோடு கோலாகலமாக கொண்டாடப்போகும் இவர் பிறந்தது என்னவோ தஞ்சை மாவட்டம் தஞ்சாவூரில் தான் எனினும் இவர் பல மாவட்டங்களுக்கு சொந்தக்காரர். ஆமாம் தஞ்சையில் பிறந்து மதுரையில் வளர்ந்து படித்து பின்னர் சென்னையில் புகழ்பெற்று இப்போது திரும்பவும் மதுரையில் வசிக்கின்றார்.

நாம் அசை போட்டால் தாடை வலிக்கும். இவர் அசை போட்டால் பதிவு பிறக்கும். அப்படியாக "அசைபோடுகிறேன்" என்கிற தலைப்பிலே எழுத ஆரம்பித்து மாதம் மாதம் தாவறாமல் வரும் பௌர்ணமி மாதிரி பளிச்சுன்னு ஒரு பதிவை பிரசவித்து விடுவார். சில சமயம் மாதத்துக்கு இரண்டு பௌர்ணமி கூட வந்து விடும். ஆனால் ஜனவரி மாதமானால் மட்டும் ஐந்துக்கு குறையாமல் பௌர்ணமி எட்டி பார்த்துவிடும்.

பதிவுலகில் இவர் சம்பாதித்தது எக்கச்சக்கம். ஆமாம் நண்பர்கள் எக்கச்சக்கம். எல்லா வயதிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு. சமீபத்தில் கூட குட்டிகோவியார் என்னும் புதிய ஆண் நண்பர், குட்டி வால் என்னும் பெண் நண்பர். இப்படியாக அந்த மாதிரி மூத்திர பதிவர்கள் முதல் மூத்த பதிவர்கள் வரை இவருக்கு நண்பர்கள்.

இவர் குடும்பமே எழுதும். இளைய மகள் 1995 கனையாழியில் கூட எழுதியிருக்காங்க. அன்பான மனைவி, அன்பான குழந்தைகள் அருமையான பேத்தி என ஒரு நிறைவான குடும்பம். கிட்ட தட்ட இவரது வெற்றிக்கு காரணம் கூட அந்த அன்பான குடும்பம் என்றே சொல்லலாம்.

எழுத வரும் பல புதியவர்களை ஊக்குவிப்பவர். எழுதி மறந்த பல பழைய பதிவுகளை தூசி தட்டி படிக்க வைப்பவர். ஆம் வலைச்சர பொறுப்பாசிரியர். \\தமிழ் கற்றவன் - அறிஞன் இல்லை - கவிஞன் இல்லை - புலவன் இல்லை - தமிழ் கற்றவன் - அவ்வளவு தான்\\ என தன்னை பற்றி குறைவாக சொல்லி கொண்டாலும் அதை எல்லாம் தாண்டி நன்றாக எழுத கூடியவர்.வங்கிப்பணியில் இருந்தவர்.

இவரை பிடிக்காதவர் இன்னும் பிறக்கவில்லை. பிறக்க போவதும் இல்லை. எந்த பிரச்சனைக்குள்ளும் இவரின் நிழல் கூட புகாது.எல்லாத்துக்கும் மேல இவர் ஒரு மனிதநேயமிக்க மனிதர். நல்ல ஆன்மீக சிந்தனை உடையவர். பிறந்தது ஒரு மடத்தின் வீட்டில், பழகியது ஒரு மடத்தின் கூட என்றெல்லாம் மடம் இவர் கூட இவர் வாழ்வில் தொடர்ந்து கொண்டே இருந்தாலும் இவர் தொடராத ஒரு மடம் அது பிடதி மடம் தான்:-)))

இத்தனை வெற்றிக்கும் காரணம் இவரது திருமணம். ஆமாம் இவரது வெற்றிக்கான சக்தி வந்ததே இவரது திருமணத்துக்கு பின்னர் தான். இன்னும் சொல்ல போனால் சக்தியே மனைவியாக வந்தது. ஆமாம் அந்த அக்காவின் பெயர் செல்விஷங்கர். ஆமாம் இப்போது புரிந்ததா இத்தனை நேரம் யாரைப்பற்றி சொல்லிக்கொண்டு இருந்தேன் என்று. அதே அதே....நாம் சீனாசார் என செல்லமாக அழைக்கும் சீனாசார்- செல்வி ஷங்கர்அவர்களின் திருமண நாள் செப்டம்பர் இரண்டாம் தேதியாகிய இன்று தான்.

நாம் வாழ்த்துவோம். ஆசீர்வாதம் வாங்கிப்போம்! சீக்கிரம் மணிவிழா கொண்டாட இருக்கும் இந்த தம்பதியர் எல்லா வளமும் பெற்று நீண்ட நாள் நம்மை எல்லாம் வழிநடத்த ஆண்டவனை வேண்டுகின்றோம்!

குறிப்பு: போஸ்டர் ஒட்டியது அபிஅப்பா! பசை தடவியது சிங்கை சிங்கம் ஜோசப் பால்ராஜ்! படம் உதவி ஆயில்யன் இல்லை கூகிள்.

Friday, August 20, 2010

Wishes: இலவசக் கொத்தனார்


பின்னூட்டப் புயல்,
வெண்பா வேந்தன்
குறுக்கெழுத்து கோமான்;
ட்விட்டர் குமான்!
இலவசக் கொத்தனாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் (Aug-20)!

குறுக்கெழுத்து போட்டி மட்டும் இட்டு தன் ப்ளாக்கர் கடமையினை,மாதா மாதம் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் அண்ணாச்சி மீண்டும் வந்து, ஆண்டு முழுதும் அருமையாய் பதிவுகளை வழங்கிடவேண்டுமாய் ஒரு சின்ன ரிக்வெஸ்ட் வுட்டுக்கிறோம் :)

Wishes: JK

இன்று பிறந்த நாள் காணும் மூத்தப் பதிவரும், பெங்களூருக்கு மிகச் சமீபத்தில் வேலை மாற்றம் வாங்கிக்கொண்டு(என்னாத்துக்கு? எல்லாம் பஃபுக்குத்தான்) சென்றிருக்கும், செல்லமாக ஜேகே என்றழைக்கப்படும் கொல்லிமலை சாரல் ஜே கே வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Friday, July 30, 2010

Wishes : அழகிய சிங்கர் மற்றும் அருஞ்சுவை சங்கர் !

பதிவுலக பெருந்தைகள் இருவருக்கு இன்று பிறந்த நாள், எத்தனையாவது என்று கேட்காதீர்கள் கவர்ச்சி குறைந்துவிடும் :)

********



சொந்தங்களே,

30-07-2010 பிரபல பாடகர் ”அண்ணண்” புதுகை அப்துல்லா , பிரபல இயக்குநர் அண்ணண் கேபிள் சங்கர் எனப்படும் சங்கர் நாரயணண் இருவருக்கும் பிறந்த நாள்.

என்னோடு இணைந்து உங்கள் வாழ்த்த உங்களை அழைக்கிறேன்.

ஜூலையில் பிறந்த சூரர்கள் சங்கத்தின் சார்பாக சிறப்பு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


இப்படிக்கும்
ஜோசப் பால்ராஜ்

Sunday, July 25, 2010

Wishes: சீனா ஐயாவின் பேத்தி நீனாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !

நமது சீனா ஐயா - செல்விஷங்கர் அம்மாவின் செல்லப் பேத்தி நீனாவுக்கு இன்று முதல் பிறந்தநாள், குழந்தை எல்லா வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துவதுடன், நீனாவின் பெற்றோர்களுக்கும் நல்வாழ்த்துகள்.

அன்புடன்
கோவியார்.







நீனாக் கண்ணா ! நீ
நிமிர்ந்து பார்த்து சிரிக்கிறாய் !
நீண்ட உலகம் உனக்குத்தான் !
கைகள் தட்டி ; கண்கள் சிமிட்டி !
கனி வாய் திறந்து மகிழ்கிறாய் !
மணியாய் மகிழ்ந்து ! பிரியா
இதழ்கள் நாதம்(ன்) இசைக்கும்
நல்ல குடும்பம் உனக்கு !
நல்லவை எண்ணி ! நாளும்
சிறக்க நல்வாழ்த்துகள் !
நாளை உலகம் உனக்குத்தான் !
நான்முகக் கடவுள் நல்குவான் !
நாளும் மலர்ந்து ! நன்றாய் மணக்க !
அய்யய்யா ! அம்மம்மா ! அன்பு வாழ்த்துகள் !
அண்ணன் ! அக்கா ! ஆடி மகிழ
கூடி மகிழும் குழந்தை நீ !
குவளையம் சிறக்க
குறுநகை புரிவாய் !

அன்புடன்
சீனா

Wednesday, July 21, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள் .:: மை ஃபிரண்ட் ::.


இது சங்கீத திருநாளோ!

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

சின்னச் சின்ன ஆசைகள் சித்திரங்கள் வரைந்தாள்..

முத்தமிட கன்னங்களும் நனைந்தாளே..

கொஞ்சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்..

கண்களை பின்புறம் வந்து மூடுவாள்..

செல்லம் கொஞ்சித் தமிழ் பாடுவாள்..

தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்..

உறங்கும் பொழுதும் என்னைத் தேடுவாள்..

அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்..

பூவெல்லாம் இவை போல அழகில்லை..

பூங்காற்றில் இவை போல சுகமில்லை..

இதுபோல சொந்தங்கள் இனியில்லை..

எப்போதும் அன்புக்கு அழிவில்லை..

இவள்தானே நம் தேவதை..

நடக்கும் நடையில் ஒரு தேர் வலம்..

சிரிக்கும் அழகு ஒரு கீர்த்தனம்;

கண்ணில் மின்னும் ஒரு காவியம்;

மனதில் வரைந்து வைத்த ஒரு ஓவியம்;

நினைவில் மலர்ந்து நிற்கும் ஒரு பூவனம்..

என்றும் எங்கும் இவள் ஞாபகம்..

இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்..

இருபக்கம் காக்கின்ற கரையாவேன்;..

இமையாடும் பொன்னூஞ்சல் நானாவேன்..

இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்..

எப்போதும் தாலாட்டுவேன்..

சின்னச் சின்ன ஆசைகள் சித்திரங்கள் வரைந்தாள்..

முத்தமிட கன்னங்களும் நனைந்தாளே..

கொஞ்சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

இது சங்கீத திருநாளே!

எம் இனிய இணைய நட்பிற்கு,
எங்களின் இணைய தமிழ் சகோதரி ..::மைபிரண்டு::.. இன்று பிறந்த நாள்!எம் மனம் மகிழ வாழ்த்துகிறோம்!


புடிச்சு போட்ட பாட்டு இங்கே இருக்கு பார்க்கலாம் :-)

Tuesday, July 20, 2010

சீமாச்சு அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!

இன்று நம் சீமாச்சு அண்ணாவுக்கு பிறந்த நாள். அவர் எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல அவருக்கு பிடித்தமான வைத்தீஸ்வரன் கோவில் அருள் மிகு செல்வமுத்துகுமரனை வேண்டுகிறோம்.

குறிப்பு #1: இதிலே யார் சீமாச்சு அண்ணா என கேட்பவர்களுக்கு அண்ணன் அவர்கள் தன் கையால் ஒரு பவுன் மோதிரம் பரிசளிப்பார் என தன்னடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றோம்.

குறிப்பு # 2: வந்து வாழ்த்துங்க. வேற எதும் இல்லை.

Thursday, July 15, 2010

Wishes : நிஜமா நல்லவருக்கு நிஜமான தேவதை !

பதிவுலக அன்புத்தம்பி நிஜமா நல்லவருக்கு இரண்டாவது குழந்தையாக குட்டி தேவதை பிறந்திருக்கிறாள்.




Baby Profile Graphics and Comments



குட்டி தேவதை நல்லாசிகள், பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், குட்டி தேவதையின் சுட்டி அண்ணனுக்கும் நல்வாழ்த்துகள் !

Monday, July 12, 2010

Wishes: ஜெயஸ்ரீ ஐயப்பன்

இன்று(12-07-2010) 4வது பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படப் பிதாமகர், புனைவுகளின் திருமகர், வெண்பா வாத்தியார் ஐயப்பன்(ஜீவ்ஸ்) அண்ணாச்சியின் குட்டி தேவதை ஜெயஸ்ரீயை எல்லாரும் வாழ்த்தலாம். கூட்டமா கெளம்பி வாங்க.



நினைவாஞ்சலி- உமர் தம்பி, சிந்தாநதி

இதே நாளில்(ஜூலை-12-2006) நம்மை எல்லாம் விட்டுப் பிரிந்த தமிழ் இணையத் தந்தை என அழைக்கப்படும் உமர் தம்பி , ஜூலை-8 ல் நம்ம விட்டுப்பிரிந்த அண்ணல் சிந்தாநதி அவர்களுடைய நினைவுகளையும் சங்கம் சார்பாக பதிகிறேன். மறக்க இயலுமா இந்த இருவரையும்?

Saturday, July 10, 2010

Wishes : பிறந்த நாள் - மாரனேரி ஜோசப் பால்ராஜ் !

ஜூலை 11, சமூக சேவகர், கொடையாளர், பலருக்கு கல்விக்கண் திறக்கும் அருளாளர், பதிவர் திரு மாரனேரி ஜோசப் பால்ராஜ் என்ற பெயருடைய சின்னவா யூசுப் பால்ராஜ் ஐயங்காருக்கு இன்று பிறந்த நாள்.



ஆசிகளுடன் நல்வாழ்த்துகள்
பெரியவா கோவியார்
சிங்கப்பூர்


********

மேலும் சிறப்பு வாழ்த்துப்பாடலை இணைத்து வாழ்த்துபவர் அத்திவெட்டி திரு ஜோதிபாரதி,






தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலை கனி வயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாயிடம் உருவாகி

வண்ணம் பாடி ஒரு வளர் தென்றல் தாலாட்ட
கண்ணம் பாடி அணை கடந்து நலம் பாடி

ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர நீர்வீழ்ச்சி எனும் பேரில்
நீண்ட வரலாறாய்

வீடு தாண்டா கற்பு விளங்கும் தமிழ் மகள் போல்
ஆடு தாண்டும் காவிரியாய்
அடங்கி நடந்து
அகண்ட காவிரியாய் பின் தவழ்

கரிகாலன் பேர் வாழும் கல்லணையில் கொள்ளிடத்தில்
காணும் இடமெல்லாம் தாவிப் பெருகிவந்து
தஞ்சை வள நாட்டைத் தாயாகிக் காப்பவளாம்
தனிக்கருணை காவிரி போல்

செல்லும் இடமெல்லாம் சீர்பெருக்கி பேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்

பிள்ளையென நாளும் பேச வந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக்கனி
எங்கள் இதயக்கனி இதயக்கனி

நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணி பாடுங்கள்


நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்கும்போது இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தை பார்க்கும்போது இன்பம்
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை

நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது
பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம் மனிதன் இதயமே
உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே

நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

நதியை போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்
கடலை போல விரிந்த இதயம் இருந்திட வேண்டும்
வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்


நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

Thursday, July 8, 2010

Wishes: கவிதாயினி காயத்ரி




கவிதைகள் எல்லாம் அதிரடி,
படிக்கிறவங்களுக்கு கன்பார்ம்டு ஏர்வாடி,

கையில வெச்சுக்கிறாங்க மெஹந்தி,
இவுங்க கூட சேட் பண்ணினா நமக்கு வரும் பீதி.

நம்பர் வெச்ச ஜிமெயில் ஐடி,
ஜிடாக்ல லாகின் பண்ணினா போயிருங்க பேசாம ஓடி.

மலையில கிடைக்கும் திணை,
இவுங்க கவிதை படிச்சா நமக்கு வரும் வினை,

டீ ஆத்துறதுல இவுங்க செம கில்லாடி,
பாலை கவிதை படிச்சவன் குடுப்பான் கல்லடி.

பதிவுக்கு வெச்ச பேரு பாலை,
படிச்சா கலங்குறது நம்ம மூளை.

மக்கள் இவுங்களுக்கு குடுத்த பட்டம் கவிதாயினி,
காயத்திரி பதிவு போட்டா, படிப்பியா நீ?

பொண்ணுங்களுக்கு புடிச்ச கலரு பிங்கு,
இவுங்க பிலாக் படிச்சா ஊதுறாங்க சங்கு.

பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா..
மெட்ராசுக்கா...திருச்சிக்கா..திருத்தணிக்கா..
கவிதை எல்லாம் போட்டு
இனிமே எங்களை கொலை பண்ணவேணாங்க்கா

யானைக்கு இருக்கு தும்பிக்கை,
இவுங்க கவிதை எல்லாம் ஒரே மொக்கை.

தட்டி தட்டி கை யெல்லாம் வலிக்குது,
ஜல்லடை இல்லாமலேயே இவுங்க பதிவு எல்லாம் சலிக்குது.

அம்மணிக்கு கொஞ்சம் தலையில ஓவர் வெயிட்டு,
கலருமட்டும் கிராபிக்ஸ் இல்லாத சிவாஜி ஒயிட்டு.




என்னிக்குமே காளை மாடு பாலு தராது,

நல்லா கலாய்ச்சுக்கோ, சான்ஸ் போனா வராது.




கவிதையாலே எங்களை

கல்லால அடிக்கும்

கவலைப் படாத காரிகை
கவிதாயினி காயத்ரிக்கு பிறந்த நாள்(8-ஜூலை) நல்வாழ்த்துக்கள்






Wishes by
Sangam Groups.


இது பழைய பதிவு தான்....2007, 2008 வருடத்தின் மீள்பதிவே. என்ன பண்ண...!!

Wednesday, July 7, 2010

Wishes: Boston ஸ்ரீராம்



இன்று(07.07.10)பிறந்தநாள் கொண்டாடும் பாஸ்டன் ஸ்ரீராம் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

குறிப்பு: மேலேயுள்ள புகைப்படம் 17 வருடத்துக்கு முன்பு எடுத்தது.



Saturday, July 3, 2010

Wishes: ’வாத்தியார்’ இளவஞ்சி

இன்று (04-07-2010) பிறந்த நாள் காணும்

எங்கள் ஆசான்







இனிமே இவருக்குத் தேவை வயாக்ரா

பேசினா முன்னாடி இருக்கிறவன் மூஞ்சியில நயாகரா





வாழ்த்த வயதில்லை

கீழ வுழுந்து கும்புட்டுக்கறோம்!


இனிய பொறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்யாரே....!!!


Wishes: Gopinath



இன்று (03-07-2010)
பிறந்த நாள் கொண்டாடும்
அமீரகச்சிங்கம்
கோபிநாத்திற்கு



வாழ்த்துக்கள்!

Tuesday, June 29, 2010

நம்ப மக்காவுக்கு பொறந்தநாளுங்க

கவிதையை பொழப்பாக்கி
வாழற சனம் மத்தியிலே
கவிதையை பொறப்பாக்கி
தெனம் தந்த ராசா

கருவேலமரத்து நிழலு
வெயிலு நேரத்தோட ஓஞ்சுச்சு
அந்த நிழலோட வெப்பத்தையும்
உணர வைக்கும் உன் கவிமூச்சு


கோயில்ல சாமியைவச்சு படைக்குற
மனுசப்பயலுக்கா(க) - எங்க
சாமி மனசை கோயிலாக்கி
வாழுது பாரு மக்கா

சோத்தை பங்கு போட்டு
பாசத்தை ஊட்டும் தாயா(ய்)
நேசத்தை நெஞ்சுல வைச்சே
எழுத்தை சுமந்தே சேயா(ய்)

இத்தனை அன்பை எழுத்துல வச்சு
ஆதரவா தோளுல தூக்கி
செல்லமா முத்தங்கொடுத்து
தமிழை தாலாட்ட உன்னைத்தாண்டி
யாருமில்லை ஈடு..
கவிதை புரியாதவனை புரியவைக்க
எடுக்கலை நீ பாடு...

உன் குடும்பமுன்னு சொல்லும்போது
நானுமிங்க சேர்ந்து நிப்பேன்.
உன் பொறப்புல ஒண்ணா இல்லையேன்னு
கொஞ்சம் தவிச்சு வைப்பேன்

***

இன்னைக்கு (29/06/2010) பொறந்த நாளு கொண்டாடுற, நம்ப மக்கா பா. ராஜாராம் அண்ணனுக்கு ஒறமொறை சகிதமா வாழ்த்துச் சொல்ல கூப்பிடுறேன்.

வந்து வாழ்த்திட்டுப் போங்க மக்கா!
*
*

Sunday, June 27, 2010

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - கென் aka சாந்தாமணி கென்

வாழ்வு

தனித்த விதையொன்று
பாறையிடுக்கில்
முளைவிட

உயிர் தீரும் அவசரத்தில்
நீர்த்தேடி விரைந்தன
வேர்கள்

ஆழ்த்துளையிட்டு
வறண்ட நதியில்
சுரப்பைக்கண்டு பருகின

கருக்கிட்ட சூரியனை
அளந்திட உயர்ந்து
எழுகையில்
கிழிப்பட்ட துளைகளில்
முகம்காட்டுகிறதாம்
வெளிச்சப்புள்ளிகள்

ஈரம் கசியும் நதி
ஓடிக்கொண்டிருக்கிறது
ஓரமாய் .....

********



இன்று 27.06.2010 இனிய பிறந்த நாளில், கென் aka சாந்தாமணி கென்’க்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்...!

Saturday, June 26, 2010

வாழ்த்துக்கள் - வெயிலான்






இன்று

(26/06/2010)

பிறந்த நாள் விழா காணும்

இன்றைய திருப்பூர் பதிவர் சங்கத் தலைவர்,

நாளைய அனைத்துலக பதிவர் சங்கத் தலைவர்,

நாளை மறுநாள் அமெரிக்க ஜனாதிபதி

வாழும் வரலாறு

எங்கள்

வெயிலானை

வாழ்த்த வயதில்லை. வணங்கி ஆசி பெறுகின்றோம்.






இங்ஙனம்....

அனைத்துலக தமிழ் வலைப்பதிவர் பேரவை, சங்கம், அமைப்பு, கட்சி, கழக உடன்பிறப்புகள் மற்றும் ரத்தத்தின் ரத்தங்கள்

*
*

Thursday, June 24, 2010

Wishes:கண்மணி

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நம் கண்மணி டீச்சருக்கு உங்க வாழ்த்துக்களை அள்ளி வீசுங்க.


பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா!!!

வாழ்த்துவோர்,
சங்கம்

New born wishes - இம்சை அரசி & மோகன் பிரபு

நேற்று இரவு குட்டி தேவதையின் பெற்றோராய் பதவியேற்றம் பெற்றிருக்கும் இம்சை அரசி & மோகன் பிரபு தம்பதியருக்கும், குட்டி தேவதைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

Tuesday, June 15, 2010

உமர்தம்பி - பிறந்ததினம் இன்று..

கணிணியில் தமிழைத் தடங்கின்றி தட்டச்சிட உதவும்வகையில் தேனீ எழுத்துருவை அனைவரும் பயன்படும் வகையில் உருவாக்கித் தந்தவரான தேனீ உமர்தம்பி பிறந்த தினம் இன்று (15-06-2010). அண்ணாரின் நினைவை மனதில் ஏந்துவோம்.




தேனீ எழுத்துரு தந்த தமிழ் இணைய மக்களிடம் யுனிகோட் உமர் என்று அன்போடு அழைக்கப்படும் அதிரை   உமர்தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம் கிடைத்த செய்தி முதலில் நண்பர்கள் மற்றும் INFIT  இணையம் மூலமாகவும் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

Monday, June 14, 2010

வலைப்பதிவர் தின வாழ்த்துகள்!


இன்று (14/06/2010) வலைப்பதிவர் தினம்.

உலக வலைப்பதிவர் அனைவருக்கும் சங்கத்தின் சார்பாகவும் வலைப்பதிவு வாசகர் சார்பாகவும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாழ்த்துகள் வலைப்பதிவர்களே!!!!!

மேலும் விவரங்கள் இங்கு ..

*
*

Friday, June 4, 2010

பைத்தியக்கார(சிவராம)னுக்கு பொறந்தநாளு வாழ்த்துக்கள்...


மார்க்சிய சிந்தனையில் செய்யப்பட்ட கேக்கு
லெனினிய முந்திரித் தூவல்கள் ஜோக்கு
பூக்கோவையும் நீட்சேயையும் பசையாக்கியாச்சு
கேக் செய்தவரை உம்மா கொடுத்து சாகப்பண்ணியாச்சு

எழுத்தாளர் செத்துப்போயி
பிரதி பொழச்சிக் கெடக்கு
படிச்சவன் மண்டயெல்லாம்
பிடிச்சிருக்கு கிறுக்கு

வயசு தெரிய ஏத்திவெச்ச
மெழுகுவத்தி ஒண்ணு
அதில் வெளிச்சம் வர வேணுமுன்னு
தோணுதுங்க கண்ணு

அன்பான சிவராமா..
பொறந்தநாளாம் இன்று
வாழ்த்து சொல்லி..வாழ்த்தி செல்லு
ஜெயம்வெல்லவேண்டுமென்று

மெழுகுவர்த்தி அணைக்க
பின்நவீனம் பார்த்து
சகுனத்தடை ஏதுமில்ல
வாய ஊது காத்து

கத்திப்போட்டு கத்திப்பட்டு - கேக்
வெட்டச் சொல்லும் நீங்க
காத்திருந்து காத்திருந்து
சாப்பிட்டுத்தான் போங்க..

(! அடடே கவுஜைகள் தொகுப்பிலிருந்து..)

இன்னைக்கு (04/06/2010) பொறந்தநாளு கொண்டாடும் எங்க அன்பான அண்ணாத்த சிவர்ர்ர்ர்ராமருக்கு இனிய பொறந்த நாள் வாழ்த்துக்களுங்கோ!!!!!

Friday, May 28, 2010

New born wishes - அமுதினி (காயத்ரி - சித்தார்த்)



குட்டி தேவதை அமுதினியின் வருகையால் பூரிப்போடும் பெருமிதத்தோடும் இருக்கும் காயத்ரி - சித்தார்த் தம்பதியருக்கு வாழ்த்துகளையும், அமுதினிக்கு ஆசிகளையும் அள்ளி வழங்க வேண்டுகிறோம் .

வாழ்த்துவோர்,
சங்கம்

Thursday, May 27, 2010

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - கே.வி.ராஜா


அன்பின் நண்பனே

இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்: !!



வாழ்க பல்லாண்டு !! வாழ்க வளமுடன் !!

என்றும் இதே அன்போடும் நட்போடும்.. !

கவிதா
நவீன்
&
பழனி

புது மாப்பிள்ளைக்கு ரிபப்பப்பரி..

இன்று மே மாதம் 27ந்தேதி 2010ம் வருசம் கழுகுப் பார்வைக் கொண்ட வடலூர்க்கார புள்ளாண்டான் அமீரகத்தின் சார்ஜா கிளை மொக்கைப் பார்ட்டி நம்மோட கரும்புத் தோட்ட காவல்காரன் கலையரசன் கண்ணாலம் கட்டிக்கிறாருங்கோ..

அட்சதை போட்டு உங்களோட ஆசிர்வாதத்தை புதுமண வாழ்வில் தொபுக்கடீர்ன்னு குதிக்கப் போகும் அந்த இளஞ்சோடிகளுக்கு அள்ளி வழங்குங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

Wishes: ஜிரா!

நம்ம ஜிரா என்னும் கோ.இராகவனுக்கு
இன்று,
(May-27-2010)
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க! :)



பதிவுலகில்...
ரொம்ப நாள் கழித்து....
ஜிரா எழுதும் பதிவு...................இங்கே!