Tuesday, December 11, 2007

பாரதி - 125 வது பிறந்ததினம்!



அறிவிலே தெளிவு

நெஞ்சிலே உறுதி

அகத்திலே அன்பினோர் வெள்ளம்,

பொறிகளின் மீது தனியரசாணை

பொழுதெலாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம்

கரும யோகத்தில் நிலைத்திடல்

என்றிவையருளாய்

குறி குணமேதும் இல்லதாய் அனைத்தாய்க்

குலவிடு தனிப்பரம் பொருளே!


4 comments:

காயத்ரி சித்தார்த் said...

தடங்கலுக்கு வருந்துகிறோம்..

தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டின் காரணமாக வாழ்த்து சுமார் 6 மணி நேரம் காலதாமதமாக வெளியிடப்படுகிறது. :(

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

எனக்கு ரொம்பவும் பிடித்த பாரதி கவிதைகளில் ஒன்றால் ஒரு மாகவிஞனை நினைவூட்டியிருக்கிறீர்கள்,
சொல்லப் போனால் யாராவது என்னிடம் வாழ்த்துக்களோ,நினைவுக் கையொப்பமோ கேட்டாலும் பள்ளி நாட்களிலிருந்தே நான் எழுதிக் கொடுக்கும் கவிதை இது !
ஒரு நல்ல கவிஞனையும்,கவிதையையும்,பெரும் எண்ணிக்கையிலான உங்கள் நண்பர்கள் வட்டத்திற்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி !

நாகை சிவா said...

முண்டாசு கவிஞனுக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள்

கப்பி | Kappi said...

முண்டாசு கவிஞனுக்கு பல கோடி வணக்கங்கள்!!