Tuesday, August 21, 2007

Wishes : பின்னூட்டப் புயல்


பார்த்திரு.

காத்திரு.

ஒரு நாள்

எனக்கும்

கவிதை வரும்!


என்று கவிதை எழுதியது ஒரு கவிதை!


அறுசுவை உலகில் கொத்ஸ் பரோட்டா என்று தனக்கே உரிய பாணியில் ஏழாவது சுவை ஒன்றை அறிமுகப் படுத்திய நளபாகன்!


ஆன்லைனில் வெண்பாக்கள் புனைய டிப்ஸ்களை அள்ளிக் கொடுக்கும் வள்ளல்!


பின்னூட்ட இலக்கியத்திற்கு பெருமை சேர்த்த இலவச இலக்கியம்!




அவருக்கும் இன்னிக்குத்தாங்க பொறந்த நாளு!


அவரையும் சங்கம் மனதாரா வாழ்த்துதுங்கோவ்!


என்னென்னிக்கும் நல்லா இரு ராசா!


வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!


ரெடி.

ஸ்டார்ட் மீசிக்!




ஏதோ எங்களால முடிஞ்சது. இலவசமா கேக்குலயே வூடு கட்டி வெச்சிட்டோம்!

Wishes: இம்சை, வேதா, JK, தெக்கத்திக் காட்டான்

இப்படி ஒரு குவாட்ரபிள் ஜாக்பாட் யாருக்கு அடிக்கும் சொல்லுங்க. நாலு பேருக்கு இன்னிக்கு பொறந்த நாளு.


நாலு பேரு நடுவிலே!
வாழ்த்துக்கள் நம்ம மனசுலே!





1.இம்சையவே ராஜாங்கமா பண்ணும் இம்சை அரசி



2. கொல்லி மலைச் சாரலில் நனைஞ்சிகிட்டே இருக்கும் JK, (பார்த்துக்குங்கப்பு, சளி புடிச்சிக்க போவுது )



3. சர்வம் கிருஷ்ணார்ப்"பணம்"னு சொல்ற வேதா.


4. "ஏன் இப்படி? ஏன் இப்படி?"ன்னு கேட்டுகிட்டே இயற்கையை நேசிக்கச் சொல்லும் தெக்கத்திக் காட்டான்.




ஆகிய நாலு பேரும் ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும்னு சங்கம் வாழ்த்துதுங்கோ......வ்!

Friday, August 17, 2007

Wishes - ராஜி



இன்று பிறந்தநாள் காணும் என் செல்ல தங்கை ராஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

Thursday, August 9, 2007

Wishes: கேஆர்எஸ்....மாட்டிக்கிட்டீங்க!


சீனியம்மா தெரியும்ல எல்லாருக்கும். அவங்கதாங்க..கொளக்கட்டாங்குறிச்சிக் கெழவி. அவங்க திண்ணைல உக்காந்திருப்பதான் கே.ஆர்.எஸ் அந்தம்மா கண்ணுல மாட்டுனாரு. சீனியம்மா விடுவாங்களா...படக்குன்னு கூப்புட்டாங்க.

"ஏலேய்..இங்ஙன வா...ஒரு முக்கியமான வெசயம்."

கேயாரெஸ்க்குப் பயந்தான். யார்ரா இது ஒரு பெரியம்மா கூப்புறாகளேன்னு. "என்ன பாட்டீ"ன்னு பயந்தாப்புல போயி நின்னாரு.

சீனியம்மாக்குக் கோவம் வந்துருச்சுல்ல. "என்னது பாட்டியா? எங்கூர்ல எல்லாம் பெரியம்மான்னு கூப்புடுவாக. ஆமா...நீ எந்தூரு?"

திக்கித் தெணறுச்சு. "வாழப்பந்தல் பெரீம்மா"

"என்னல இது...பந்தல்ல வாழையக் கட்டுவாக...வாழைல பந்தலைக் கட்டுவாகளா! என்னவோ போ..."

"இதுக்குதான் கூப்பிட்டீங்களா?"

"இல்ல.....இங்ஙன உக்காரு மொதல்ல"ன்னு திண்ணயக் காட்டுனாக சீனியம்மா. கேயாரெஸ்சு உக்காந்ததும்..."ஆமா இங்குட்டு எங்குட்டு வந்த? பேந்தப் பேந்தப் பாத்துக்கிட்டிருக்க..இங்குட்டெல்லாம் வெவரமா இருக்கனுமப்பூ. இல்லைன்னா கிண்டிக் களியாக்கீருவாக. சரியா."

"சரி பெரீம்மா. இதுக்குத்தான் கூப்பிட்டீங்களா?"

"இல்ல. மொதல்ல இங்க வந்த காரணத்தச் சொல்லுவியா...அத விட்டுட்டு..."

"அது இங்க பெருமாள் கோயில்...." இழுத்தாரு கேயாரசு.

"பெருமா கோயிலா? கொளக்கட்டாங்குறிச்சீல என்ன பெருமா கோயிலு இருக்கு. அந்த முக்குல காச்சக்கார அம்மங்கோயிலு...அதுவும் வெட்டவெளியிலதான். இந்த முடுக்குல கோப்பம்மா கோயிலு. எல்லாம் பொம்பள சாமிதான். ஆம்பள சாமியெல்லாம் இங்க கெடையாது."

"இல்ல பெரீம்மா...பெருமாள் கோயில் இங்க இருக்கு. அதுக்குத்தான் வந்தேன்."

"சொன்னாக் கேக்க மாட்டீங்கியே! ஏமுல இப்பிடி? இங்குட்டுக்கூடிப் போ...செவலாருபட்டி வரும்...அதையும் தாண்டிப் போ...சாத்தூரு வரும். அங்குட்டுத்தான் இருக்கு பெரிய பெரிய கோயிலுக. அது சரி...எதுல வந்த?"

"காருல வந்தேன் பெரீம்மா. இதுக்குத்தான் கூப்டீங்களா?"

"இல்ல...அது வேற விசயம். ஆமா...அந்த ஊதாக் காரா ஒங்காரு...நல்ல பெரிய வண்டியாத்தான் இருக்கு."

அப்பன்னு பாத்து வீட்டுக்குள்ள இருந்து கறி வதக்குற வாசம் வந்துச்சு. கேயாரசு அப்படியே மயங்கி வாசனையப் பிடிக்காரு.

"நல்லாத்தாம் மோப்பம் பிடிக்க. ஆமா நீ கறி திம்பியா? சொல்லு"

"இதுக்குத்தான் கூப்டீங்களா?"

"இல்ல. கேள்விக்கு மொதல்ல சொல்லு."

"அது வந்து....வாசனை பிடிக்கும். வாசனை வெச்சே எதெதுன்னு சரியாச் சொல்லீருவேன்."

"ஆகா. அப்படியா. நல்லதுதான்."

"சரி. எதுக்குக் கூப்டீங்க?"

"ஓ கூப்டேன்ல....சரி...கால்ல விழு"

"என்னது?"

"ஏம்ப்பா இந்தப் பயம். எங்கால்ல விழுந்தா தப்பில்லை. அதான் பாட்டீன்னு சொன்னியே."

மொதல்ல யோசிச்சாலும் கேயாரசு சீனியம்மா கால்ல விழுந்து எந்திருச்சாரு. ஒரு பத்துரூவாத்தாள கேயாரசு கைல வெச்சி, "இன்னைக்கு ஆகஸ்ட்டு 9. ஒம் பொறந்த நாளுதான. அதுக்கு வாழ்த்துச் சொல்லத்தான் கூப்புட்டேன். நீ இன்னைக்குப் பெருமாள் கோயிலத் தேடிப் போவன்னு மயிலாரு ஏற்கனவே சொல்லீட்டாரு. அதாங் கூப்புட்டு வாழ்த்துனேன். ரொம்ப நல்லாரு"ன்னு வாழ்த்துனாக. மக்கா...நீங்களும் வாழ்த்துங்க.

வாழ்த்துகளுடன்,
கோ.இராகவன்

Wednesday, August 8, 2007

சிங்கப்பூருக்கு இன்று பிறந்த நாள்


சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்த நாளை ஆண்டு தோறும் ஆக. 8 ஆம் தேதி விமர்சியாக கொண்டாடுகிறது. இதை சிங்கப்பூர் தேசிய தினம் என்று(ம்) சொல்லுவார்கள்.

சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் தேசிய தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் விபரங்களுக்கு : நேசனல் டே பரேட் - சிங்கப்பூர்

- அன்புடன்
கோவி.கண்ணன்

Tuesday, August 7, 2007

Wishes: சனிப்பெயர்ச்சி



வணக்கம், செய்திகள் வாசிப்பது சங்கத்து சிங்கம்.

புதரகத்தில், நேற்று சரியாக இரவு ஒன்பது மணியளவில் சனிப்பெயர்ச்சி நடை பெற்றது. 5 மணிக்கு Newark வந்ததும் சில பதிவர்களிடம் செம மொக்கை போட்டபடி இருந்த சனியானது 8:45க்கே டாட்டா காட்டி சென்றதாக நமது சிறப்பு நிருபர் கூறினார். அநேகமாக இனி புதரகத்துக்கு சனி வரும் வாய்ப்பு இல்லை என்றும் உறுதியளித்ததாக நம்பப்படுகிறது. இடப்பெயர்ச்சி நடத்திய வாகனத்தைத்தான் மேலே படமாக பார்க்கிறீர்கள். இந்த பெயர்ச்சியினால் இந்தியாவுக்கு ஜென்ம சனி பிடித்துவிட்டதாக மலையாள மந்திரவாதி சிபி நாயர் பறைந்துள்ளார்.


Bonvoyage Santhosh

Thursday, August 2, 2007

இரங்கல் செய்தி

நண்பர் ஆசிப் அண்ணாச்சியின் துணைவியார் யாஸ்மீன் பாத்திமா ஆகஸ்டு 1ம்தேதி அன்று இறைவனடி சேர்ந்தார். அவருடைய பிரிவினைத் தாளாது துயருறும் அண்ணாச்சி மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களையும், அவர்களுடைய நினைவிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.