Sunday, February 20, 2011

திருமண வாழ்த்து - சஞ்சய் காந்தி


இன்னார்க்கு இன்னார் என்று
இறைவன் நிர்ணயிக்க
இவருக்கு இவளே துணை என்று
இருவீட்டார் நிச்சயிக்க - இங்கே
இனிதாய் துவங்குகிறது ஒரு
இல்லறப்பயணம்

மத்தளங்கள் கொட்ட
மலர்க்கூட்டம் பொழிய
அட்சதையேற்று இவர்கள்
அமர்ந்திருக்கும் நேரம்
வாழ்க! வளர்க!! வளம் பல பெருக!!! என்று
எண் திசை அனைத்திலும் வாழ்த்துரை நிறைந்திருக்க
அன்றில் பறவையாய் மணமொன்றி வாழவும்
இசையும் இனிமையுமாய் இணைந்திருக்கவும்
அன்புருவால் நின்று ஆசீர்வதிக்கின்றோம்
தமிழ் வலைப்பதிவர்களாகிய நாங்கள்!

8 comments:

ராமலக்ஷ்மி said...

மணமக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கோபிநாத் said...

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! ;)

கவிதா | Kavitha said...

சஞ்சய் & இந்துமதி

எல்லா வளங்களும் நலங்களும் பெற்று வாழ்க வளமுடன். ! :)

நல்வாழ்த்துக்கள் !

cheena (சீனா) said...

மண மக்களுக்கு எங்கள் இனிய மண வாழ்த்துகள்

ILA (a) இளா said...

மாப்பிள்ளைக்கு வாழ்த்துகள்!

சுசி said...

மணமக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் :)

pudugaithendral said...

தாமதமான வாழ்த்துக்கள் சஞ்சய் தம்பி

அம்பாளடியாள் said...

மிக அழகிய வாழ்த்துப்பா எனது வாழ்த்தும் இத்தோடு
இணையட்டும் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும்
தங்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும் .