மதிப்பிற்குரிய சீனா ஐயா - செல்வி ஷங்கர் அம்மா இணையர்களின் 37 ஆம் திருமண நாள் இன்று.
இவர்களின் இல்லற நல்லறத்தில் பிறந்த இருமகள்களையும் நன்கு படிக்க வைத்து, நல்ல இடங்களில் மணம் முடித்துக் கொடுத்து அவர்களின் இலண்டன் நல்வாழ்க்கையில் விளைந்த பேரப்பிள்ளைகளை கொஞ்சி மகிழ சென்று வரும் பேறு பெற்றிருக்கிறார்கள்.

சீனா ஐயா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி புரிந்துவருகிறார், செல்வி ஷங்கர் அம்மா பள்ளி ஆசிரியராக பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். மதுரையில் வீற்றிருக்கும் சிதம்பரம் இவர். எல்லோரிடமும் இன்முகம் எதிர்கொண்டு பழகும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் இருவருமே. அவர்களின் இல்லத்திற்கு அழைக்கப்பட்டு விருந்து படைக்கப்பட்ட பல்வேறு பதிவர்களில் நானும் ஒருவன் என்கிற மகிழ்ச்சி எப்போதும் எனக்கு உண்டு.
வாழ்த்த வயதில்லை என்றாலும் பார்த்து மகிழ வயதுண்டு.
சீனா ஐயா - செல்வி ஷங்கர் அம்மா அவர்களின் நல்லுள்ளத்திற்கேற்ப என்றென்றும் நலமும் வளமும் நிறைந்து வாழ்வார்கள்.